Editorial / 2026 ஜனவரி 21 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை விமானப்படையின் 11வது படைப்பிரிவு மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் அமைதி காக்கும் பணிகளுக்காகப் புறப்பட்டது, 10வது படைப்பிரிவு மீண்டும் நாடு திரும்பியது.
இலங்கை விமானப்படையின் 11வது படைப்பிரிவு (21 ஜனவரி 2026) மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. குரூப் கேப்டன் ஆசிரி பத்திரகே தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் இரண்டு பெண் அதிகாரிகள் மற்றும் ஐந்து விமானப்படை பெண் வீராங்கனைகள் உட்பட 110 விமானப்படை அங்கத்தவர்கள் உள்ளடங்குவர். மேலும் ஐ.நா. அமைதி காக்கும் பணிகளை வெற்றிகரமாக முடித்த 10வது படைப்பிரிவின் 94 விமானப்படை அங்கத்தவர்களும் அன்று நாடு திரும்பினார்.
விமானப்படை திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் தேசப்பிரிய சில்வா உட்பட விமானப்படை அதிகாரிகள், படைவீரர்கள் மற்றும் விமானப்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய குழு, நாட்டில் இருந்து புறப்படும் விமானப்படை வீரர்களை வழியனுப்பவும் வரும் குழுவை வரவேற்கவும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்.






18 minute ago
32 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
32 minute ago
32 minute ago