Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள, காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளுக்கான நிரந்தர அலுவலகம், கிளிநொச்சி அல்லது முல்லைத்தீவில் அமைக்கப்பட வேண்டும் எனக் கோரி, கிளிநொச்சியில் உள்ள காணாமல் போனோரின் உறவுகள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இணைந்து நேற்றுக் காலை கவனயீர்ப்பு நடைபவனி ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் இருந்து காலை 10 மணிக்கு, பாதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் ஆரம்பித்த கவனயீர்ப்பு நடைபவனி, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் அலுவலகம் வரை சென்றது. நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாததால் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொள்கைபரப்புச் செயலாளரிடம் கையளித்துத் திரும்பினர். (படப்பிடிப்பு: எஸ்.நிபோஜன்)


2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago