2025 மே 21, புதன்கிழமை

இந்தியப் படகு கரையொதுங்கியது

Editorial   / 2017 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், உடப்பு பிரதேசத்தில், சுமார் 30 அடி நீலமும் 05 அடி அகலமும் கொண்ட இந்தியப் படகு ஒன்று உடைந்த நிலையில் வியாழக்கிழமை இரவு கரையொதுங்கியுள்ளது.

படகு கடலில் மிதந்து வந்ததை அவதானித்த அப்பிரதேச மீனவர்கள், உடப்பு பொலிஸாருக்கும் கடற்படையினருக்கும் தகவல் வழங்கியதையடுத்து, அங்கு வருகை தந்த அதிகாரிகள், படகை கரை சேர்த்து பாதுகாத்து வைத்துள்ளனர்.

இப்படகு தொடர்பில் மேலதிக விசாரணைகளை, உடப்பு பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

(படப்பிடிப்பு: முஹம்மது முஸப்பிர்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .