Editorial / 2026 மார்ச் 23 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இந்நாட்டில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் இணைந்து, பாகிஸ்தானின் 86-வது தேசிய தினத்தை விமரிசையாகக் கொண்டாடின. பாகிஸ்தானை வலிமையான, முற்போக்கான மற்றும் ஜனநாயக நாடாகக் கட்டியெழுப்புவதற்கான உறுதிப்பாடு இதன்போது மீள வலியுறுத்தப்பட்டது.
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று (2026 மார்ச் 23) நடைபெற்ற இந்த நிகழ்வில், பாகிஸ்தானின் பதில் உயர்ஸ்தானிகர் செல்வி சுனைரா லத்தீப் (Zunaira Latif) அவர்கள் அந்நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதன்போது பாகிஸ்தான் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
துணைக்கண்ட முஸ்லிம் மக்களுக்காகத் தனித் தாயகம் கோரி, 1940 மார்ச் 23 அன்று லாகூரில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்தத் தொடர் போராட்டத்தின் விளைவாகவே, 1947 ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தான் சுதந்திர நாடாக உருவெடுத்தது.
இந்நிகழ்வின் போது, பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் விசேட செய்திகள் வாசிக்கப்பட்டன. தலைவர்கள் இருவரும் இந்த தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், பாகிஸ்தானின் ஸ்தாபகர் 'குவைத்-இ-அசாம்' முஹம்மது அலி ஜின்னா அவர்களுக்குத் தமது கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்தினர்.
நிகழ்வில் உரையாற்றிய பதில் உயர்ஸ்தானிகர் செல்வி சுனைரா லத்தீப், பாகிஸ்தானும் இலங்கையும் பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் நீண்டகால நெருக்கமான உறவைப் பேணி வருவதாகத் தெரிவித்தார்.
"வர்த்தகம், பாதுகாப்பு, அறிவியல், கலாச்சாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல துறைகளில் நிலவும் பன்முகப்படுத்தப்பட்ட உறவுகளே பாகிஸ்தான்-இலங்கை நட்புறவின் பலமாகும்" என அவர் குறிப்பிட்டார். அத்துடன், பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அவர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.






41 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago