2026 பெப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Janu   / 2023 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும்பான்மை  இனத்தவர்களாலும்  பௌத்த  பிக்குவாலும்  தடுத்து  வைக்கப்பட்ட 3  தமிழ்  ஊடகவியளார்களுக்கு  ஏற்பட்ட  அநீதிக்கு  எதிராக  மட்டு  நகரில்  சக ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு  மாவட்டத்தின்  மயிலத்தமடு  பிரதேசத்தில்  காலநடை  வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும்  பிரச்சனைகள்  தொடர்பில்  ஆராயும்  முகமாக  செவ்வாய்கிழமை (22)  கள விஜயம் மேற்கொண்டிருந்த  சர்வமதத்  தலைவர்கள்,  சிவில்  அமைப்பினர்,  மற்றும்  ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட  குழுவினரை  அங்கு  அத்துமீறிய  விவசாய  நடவடிகைகளில்  ஈடுபட்டு  வரும்  பெரும் பான்மையினத்தவர்களும்,  அங்கிருந்த  பௌத்த  மதகுரு  ஒருவரும்,   சுற்றிவளைத்து  தடுத்து வைக்கப்பட்டு  அச்சுறுத்தியமைக்கு  எதிர்ப்புத்  தெரிவித்தும்,  அவ்வாறு  செய்தவர்களுக்கு  உடன் சட்ட  நடவடிக்கை  எடுக்குமாறும்  வலியுறுத்தி  மட்டக்களப்பு  ஊடகவியலாளர்களால்  செவ்வாய்கிழமை (22)  மாலை  மட்டக்களப்பு  காந்தி  பூங்காவில்  அமையப்  பெற்றுள்ள  படுகொலை  செய்யப்பட்ட  ஊடகவியலாளர்களில்  ஞாபகார்த்த  நினைவுத்  தூபியின்  முன்னால்  ஆர்ப்பாட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வ.சக்தி   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X