Editorial / 2019 ஜனவரி 25 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப், பிரதியமைச்சராக பதவியேற்றது முதல் துறைமுகங்களுக்கு விஜயம் மேற்கொண்டு வருகிறார்.
இதற்கமைய, காலி துறைமுகத்துக்கு இன்று (25) விஜயம் மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின் போது, அங்கிருக்கும் நிலைமைகள் தொடர்பில் வதிவிட முகாமையாளர் டீ.கே.ஜீ.எல்.ஹேமசந்ரவுடன் பிரதியமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டு, அங்கு உற்பத்தி செய்யப்படும் சீமெந்து பொருட்களையும் பார்வையிட்டார்.
இதேவேளை, திருகோணமலை, ஒலுவில் துறைமுகங்களுக்கும் பிரதியமைச்சர் கடந்த வாரம் விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள குறைபாடுகள், புதிய அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பு: ஹஸ்பர் ஏ ஹலீம்)


2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago