Editorial / 2023 ஜூன் 09 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய உயர் ஸ்தானிகராலயம், பாதுகாப்பு தொடர்பான முதல் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை ஜூன் 7 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்தது.
இதில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். உயர்ஸ்தானிகர் எச்.இ.கோபால் பாக்லே, பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, இலங்கை கடற்படைத் தளபதி மற்றும் இலங்கை ஆயுதப் படைகள், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மேலும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், கோவா ஷிப்யார்ட் லிமிடெட் மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் போன்ற 16 முன்னணி இந்திய பாதுகாப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .