Princiya Dixci / 2017 மார்ச் 01 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

- ரீ.எல்.ஜவ்பர்கான், எஸ்.சபேசன், வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் துறைநீலாவணையில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் துறைநீலாவணை 8 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த 26 வயதுடைய கருணாநிதி ரஜீந்தன் எனும் இளைஞன் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
பாண் விற்பனையில் ஈடுபடும் முச்சக்கரவண்டியொன்று மோட்டார் சைக்கிளொன்றும் மோதியதில் இடம்பெற்ற இவ்விபத்தில் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றவரே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை, கல்முனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


8 hours ago
25 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
25 Feb 2026