Princiya Dixci / 2017 ஜனவரி 22 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் ஆங்காங்கே மழை பெற்றுவருகின்றது. இந்நிலையில், அம்பாறை மாவட்டத்திலும் இன்று அதிகாலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலைடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் மற்றும் கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களிலே இவ்வாறு மழை பெய்து வருகின்றது.
நீண்ட கால வரட்சிக்குப் பின்னர் பெய்து வரும் மழையினால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
எதிர்வரும் சில தினங்களில் அம்பாறை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக, பொத்துவில் வானிலை அவதான நிலைய உத்தியோகத்தர் ஆ.ஐ.ஆ நகீம் தெரிவித்தார்.
(படப்பிடிப்பு: வி.சுகிர்தகுமார் )


13 minute ago
18 minute ago
19 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
19 minute ago
34 minute ago