Janu / 2023 ஜூன் 19 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை வஹாகோட்டை வரலாற்று சிறப்புமிக்க அந்தோனியார் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றது.
இதில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் பங்கேற்றார்.
இந்த தேவாலயம் கிறிஸ்தவ பக்தர்களின் புனித தேவஸ்தானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.1696 இல்,ஜூசேவாஸ் அருட்தந்தையவர்களால் இத்தேவஸ்தானம் மறுசீரமைக்கப்பட்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளதோடு,பழமையான புனித ஸ்தானமாகவும் கருதப்படுகிறது.
தேவாலயத்திற்கு யாத்திரைக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு தேவாலய வளாகத்தில் ஓய்வு மண்டபம் தேவை என எதிர்க்கட்சித் தலைவரிடம் அருட்தந்தைகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர் குறித்த தேவையை பூர்த்தி செய்வதற்கான பணிகளை ஆரம்பிப்பதாகவும் தெரிவித்தார்.









3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago