2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

29ஆவது ஆண்டு நினைவுதினம்...

Kogilavani   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய அமைதிப்படை மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 29ஆவது நினைவுதினம், இன்று வெள்ளிக்கிழமை (21) அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் ஸ்ரீ.பவானந்தராஜா, வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஓய்வுபெற்ற வைத்தியசாலை பணியாளர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த 1887 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 21,22 ஆம் திகதிகளில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய அமைதிப்படை, 3 வைத்தியர்கள், 2 தாதியர்கள், மேற்பார்வையாளர்கள் என 21 வைத்தியசாலை பணியாளர்களையும், 47 நோயாளர்களையும் சுட்டுக்கொன்றமை குறிப்பிடத்தக்கது.   


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X