2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

IDMNC நிறுவனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

Editorial   / 2026 மார்ச் 15 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

  IDMNC சர்வதேச உயர்கல்வி நிறுவனத்தின் வருடாந்த இப்தார் (நோன்பு திறப்பு) நிகழ்வு  வெள்ளவத்தை மெரின் கிராண்ட் (Marine Grand) ஹோட்டலில் சனிக்கிழமை (14)  மிக விமர்சையாக நடைபெற்றது.

IDMNC நிறுவனத்தின் தவிசாளர் கலாநிதி வி. ஜனகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்வேறு முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக

  • பாத்லி ஹிஷாம் பின் ஆதம்: இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர்.
  • நீதிபதி முகம்மட் தாஹிர் லப்பார்: இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் இடைக்காலத் தலைவர் மற்றும் சவுதி அரேபியாவின் ஜித்தாவிற்கான முன்னாள் தூதுவர் (Consul General).  கலந்துகொண்டு சிறப்பித்தனர்:

 இவர்களுடன் சிரேஷ்ட சட்டத்தரணி ரூஸ்தி ஹபீப், பல்வேறு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், துறைசார் கல்வியாளர்கள் மற்றும் IDMNC நிறுவனத்தின் மாணவர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இந்த இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்ட அதிதிகளை நிறுவனத்தின் தவிசாளர் கலாநிதி வி. ஜனகன்,  வரவேற்றதுடன், சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவை வளர்ப்பதில் இத்தகைய சமய நிகழ்வுகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X