2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

அணித்தலைமைப் பதவியிலிருந்து விலகும் ஷன்டோ

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 23 , பி.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து அணித்தலைவராக பங்களாதேஷின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ தொடர மாட்டாரெனத் தெரிகிறது.

தனது முடிவை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு ஷன்டோ விரைவில் அறிவிக்கவுள்ளதுடன், அதைத் தொடர்ந்து நடைபெறவுள்ள கலந்துரையாடலையடுத்தே இலங்கைக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் முடிவில் உத்தியோகபூர்வமாக முடிவை அறிவிப்பதா அல்லது பின்னரா என ஷன்டோ முடிவெடுக்கவுள்ளார்.

அண்மையில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுகான அணித்தலைமைப் பதவியை கிரிக்கெட் சபை பறித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X