Shanmugan Murugavel / 2026 மார்ச் 01 , பி.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான இந்தியா தகுதி பெற்றுள்ளது.
குழு ஒன்று சுப்பர் 8 சுற்றில் சிம்பாப்வேயை ஏற்கெனவே வென்றிருந்த இந்தியா, கொல்கத்தாவில் முடிவுக்கு வந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள், றொஸ்டன் சேஸின் 40 (25), ஜேஸன் ஹோல்டரின் ஆட்டமிழக்காத 37 (22), றொவ்மன் பவலின் ஆட்டமிழக்காத 34 (19), அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் 32 (33), ஷிம்ரோன் ஹெட்மயரின் 27 (12), ஷெர்ஃபேன் ருதஃபோர்ட்டின் 14 (09) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 4-0-36-2, வருண் சக்கரவர்த்தி 4-0-40-1, ஹர்திக் பாண்டியா 4-0-40-1, அக்ஸர் பட்டேல் 4-0-35-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 196 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, சஞ்சு சாம்சனின் ஆட்டமிழக்காத 97 (50), திலக் வர்மாவின் 27 (15 ) ஓட்டங்களோடு 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் ஜேஸன் ஹோல்டர் 4-0-38-2 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தார்.
1 hours ago
02 Mar 2026
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
02 Mar 2026
02 Mar 2026