Shanmugan Murugavel / 2021 மார்ச் 30 , பி.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கின் இவ்வாண்டுப் போட்டிகளுக்கான (ஐ.பி.எல்) டெல்லி கப்பிட்டல்ஸின் அணித்தலைவராக றிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின்போது டெல்லியின் வழமையான அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் தனது இடது தோட்பட்டையைக் கழற்றிக் கொண்டு இவ்வாண்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையிலேயே பண்ட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பதாக, உள்ளூர்ப் போட்டிகளிலேயே டெல்லிக்கு பண்ட் தலைமை தாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .