2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

டெல்லி பொலிஸார் மேன்முறையீடு

Gopikrishna Kanagalingam   / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013ஆம் ஆண்டு இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஸ்பொட் ஃபிக்சிங்கில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீற் சவான் ஆகியோரை, நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுவித்த தீர்ப்புக்கெதிராக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெல்லி பொலிஸார் மேன்முறையீடு செய்யவுள்ளனர்.

இவ்விடயத்தில் மூவருக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் வாழ்நாள் கிரிக்கெட் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், நீதிமன்ற வழக்கிலிருந்து அண்மையில்,  விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் மூவர் உட்பட, குற்றஞ்சாட்டப்பட்ட 42 பேர், அக்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்கான, போதுமான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க டெல்லி பொலிஸார் 
தவறிவிட்டதாக, நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, இதற்கெதிரான மேன்முறையீட்டை டெல்லி பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பானது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் வழங்கப்பட்ட தடையில் எந்தவிதப் பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .