Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், போர்த்துக்கல் கழகமான போர்ட்டோவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்று இறுதி 16 அணிகளுக்கான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் தோற்றது.
ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை பெடெரிக்கோ சியெஸ்கா பெற்றதோடு, போர்ட்டோ சார்பாக மெஹ்டி தரெமி, மூஸா மரெகா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், செவில்லாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான இறுதி 16 அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெஸ்லீகா கழகமான பொரூசியா டொட்டமுண்ட் வென்றது. டொட்டமுண்ட் சார்பாக, எர்லிங் பிறோட் ஹலான்ட் இரண்டு கோல்களையும், மஹ்மூட் டஹூட் ஒரு கோலையும் பெற்றனர். செவில்லா சார்பாக, சுஸோ, லுக் டி ஜொங்க் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
17 minute ago
34 minute ago
37 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
34 minute ago
37 minute ago
44 minute ago