Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பீற்றர் சிடிலின் எதிர்காலம் குறித்துச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அவரது முகுதுப் பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் விளையாடிய பீற்றர் சிடில், முதல் இனிங்ஸில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால், இரண்டாவது இனிங்ஸில் அவருக்கு, முதுகு உபாதை ஏற்பட்டிருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் பங்குபற்றியிருக்கவில்லை.
மெல்பேணுக்குத் திரும்பிய பீற்றர் சிடில், அவரது முகுதுப் பகுதியில் ஸ்கான்களை மேற்கொண்டதைத் தொடர்ந்து, அவரது கீழ் முகுதுப் பகுதியில் என்புடைவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கணிசமானளவு காலம், அவரால் போட்டிகளில் பங்குபற்ற முடியாது போகவுள்ளது. அந்தக் காலத்திலேயே அவர், அவரது இடது கணுக்காலிலும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளவுள்ளார்.
தற்போது 31 வயதான பீற்றர் சிடில், நீண்ட காலத்தை கிரிக்கெட்டில் விளையாடாது கழிக்கவுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் காணப்படும் வேகப்பந்து வீச்சாளர்களது அதிகரித்த எண்ணிக்கை காரணமாகவும் அவர்களின் திறமை காரணமாகவும், சர்வதேசப் போட்டிகளில் பீற்றர் சிடில், மீண்டும் பங்குபற்றாது போனாலும் ஆச்சரியத்துக்குரியது அல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .