Editorial / 2020 ஜூலை 02 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
2011 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், வாக்குமூலமளிக்க இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, சமூகமளித்துள்ளனர்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள, விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணை பிரிவுக்கு இன்று (02) காலை 09 மணிக்கு வருமாரு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, குறித்த விசாரணைக் குழுவில் விளையாட்டுவீரர் உபுல்தரங்க, நேற்று (01) வாக்குமூலமளித்திருந்தார்.
இலங்கை அணியின் தெரிவிக்குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா, குறித்த விசாரணைக் குழுவில் நேற்று முன்தினம் முன்னிலையாகி சுமார் ஐந்தரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
வாக்குமூலம் வழங்க குமார் சங்கக்கார ஆஜர் #Tamilmirror
Posted by Tamil Mirror on Wednesday, July 1, 2020
7 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
15 Nov 2025