Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தகுதிபெற்றுள்ளார்.
இன்று நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில், உலகின் இரண்டாம்நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப்பை 6-3, 6-3 என்ற ந்நேர் செட்களில் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு செரீனா தகுதிபெற்றார்.
இதேவேளை, தனது காலிறுதிப் போட்டியில், தாய்வானின் ஹெஸ்ய் சு-வெய்யை எதிர்கொண்ட உலகின் மூன்றாம்நிலை வீராங்கனையான ஜப்பானின் நயோமி ஒஸாகா, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், தனது காலிறுதிப் போட்டியில் பல்கேரியாவின் கிறிகர் டிமிட்றோவ்வை எதிர்கொண்ட ரஷ்யாவின் அஸ்லான் கரட்செவ், 2-6, 6-4, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
14 minute ago
31 minute ago
34 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago
34 minute ago
41 minute ago