A.P.Mathan / 2014 ஜூன் 17 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ஐந்தாவது நாளின் முதற்ப் போட்டி ஜேர்மனி - போர்த்துக்கல் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஜேர்மனி அணி 4 இற்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜேர்மனி அணியின் தோமஸ் முல்லெர் அடித்த மூன்று கோல்கள் ஜேர்மனி அணியின் வெற்றிக்கு கை கொடுத்தன. போட்டியின் நாயகனாகவும் அவரே தெரிவானார். 12ஆவது நிமிடத்தில் பனால்டி உதை மூலமாக முதல் கோலை அடித்த முல்லர், 46 மற்றும் 78ஆவது நிமிடங்களில் அடுத்த இரண்டு கோல்களையும் அடித்தார். மட்ஸ் ஹமல்ஸ் 32ஆவது நிமிடத்தில் போட்டியின் இரண்டாவது கோலை அடித்தார். குழு G இன் போட்டி இது. 5 minute ago
14 minute ago
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
19 minute ago
1 hours ago