2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

டோணிக்கு பிடியாணை

Kanagaraj   / 2014 ஜூன் 24 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஆந்திரப் பிரதேச நீதிமன்றம் டோணிக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை பிடியாணை  பிறப்பித்துள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தாபுர் மாவட்ட நீதிமன்றத்தில் டோணிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அவருக்கு மூன்று முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகவில்லை.

இதை அடுத்துஇ டோணியை ஜூலை 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட வேண்டும் என்று பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிஸினர் டுடே ஏப். 2013 இதழின் அட்டையில் வெளியான புகைப்படத்தை வைத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்துக் கடவுள் விஷ்ணு போல் வரையப்பட்டிருந்த படத்தில் டோணி படத்துடன் 'காட் ஆஃப் பிக் டீல்' என்ற தலைப்பிட்டு வெளியானது. அதில் ஒரு கையில் ஒரு நிறுவனத்தில் ஷூவை டோணி வைத்திருந்தது போல் இருந்தது. இதை அடுத்துஇ விஷ்வ ஹிந்து பரிஷத்தின் உள்ளூர் தலைவர் ஒய்.ஷ்யாம் சுந்தர் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதே போன்ற வழக்குகள் டோணியின் மீது டெல்லிஇ புனே உள்ளிட்ட நகரங்களிலுள்ள நீதிமன்றங்களிலும் பதிவு செய்யப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .