2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

இங்கிலாந்து முழுமை ஆதிக்கம்

A.P.Mathan   / 2014 ஜூலை 29 , பி.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் இந்தியா அணி தடுமாறி வருகின்றது. தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பாடிவரும் இந்தியா அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 323 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. டோனி ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும், அஜின்கையா ரெஹானே 54 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்டுவோர்ட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டேர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், மூயேன் அலி 2 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். 
 
இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 567 ஓட்டங்களைப் பெற்று தமது துடுப்பாட்டத்தை இடை நிறுத்தியது. இதில் இயன் பெல் 167 ஓட்டங்களையும், கரி பலன்ஸ் 156 ஓட்டங்களையும், அலஸ்டியர் குக் 95 ஓட்டங்களையும், தனது முதற்ப் போட்டியில் விளையாடும் ஜோஸ் பட்லர் 85 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்களையும், ரவீந்தர் ஜடேஜா 2 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். 
 
இங்கிலாந்து அணியின் சிறந்த பந்துவீச்சு இந்தப் போட்டியில் அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்தியா அணி 246 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது. இன்னமும் 47 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டால் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடராமால் இங்கிலாந்து அணியை துடுப்பாட வைக்கமுடியும். இங்கிலாந்து சொவ்தம்ப்டன் த ரோஸ் போல் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றுவருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .