2025 ஜூன் 23, திங்கட்கிழமை

T 20 கிரிக்கெட் ஏலம் ஒத்திவைப்பு

Editorial   / 2023 நவம்பர் 05 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா  கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த டி-20 கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏலம்விடும் நடவடிக்கை 24 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முகம் கொடுத்துள்ள அழுத்தமானது, கிரிக்கெட் வீரர்களை ஏலத்துக்கு விடும் நடவடிக்கைக்கு உகந்த சூழலாக அமையாது. ஆகையால் ஏலத்தை ஒத்திவைக்குமாறு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய​யே ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

டி-20 போட்டி டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையிலும் நடத்தப்படவுள்ளது.

  
 இந்தியாவில்  தற்போது நடைபெற்று வரும் உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி தோல்வியடைந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை கிரிக்கெட் நிறுவன நிர்வாகத்திற்கு சிலர் அழுத்தம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .