Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 12 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
௭ம்.ஐ. பாறூக்
ஏறாவூர்பற்று, கரடியனாறு பொலிஸ் பிரிவில், மாடுகளைத் திருடி விற்பனை செய்துவந்த சந்தேக நபர்கள் இருவரையும், இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி தியாகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
கரடியனாறு பொலிஸ் நிலையப் பரிசோதகர் , எம்.ஐ. வஹாப் தலைமையிலான பொலிஸ் குழுவே, இவர்களைக் கைதுசெய்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியது .
இதனோடு தொடர்புபட்ட மேலும் பலர் தேடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரடியனாறு பொலிஸ் பிரிவின் இலுக்குப்பொத்தானை எனுமிடத்தில், இருவர் மாடுகளைத் திருடி, தன்னாமுனை பிரதேசத்தில் இறைச்சிக்காக விற்பனை செய்து வருகின்றனர் எனக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையிலேயே, இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்ததாக, பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
3 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago