Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூன் 12 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம், எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜெயந்தியாய பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி சிறிய ரக லொறியொன்றில் அறுவைக்கு நான்கு மாடுகளைக் கொண்டுசென்ற சாரதி ஒருவர், நேற்று (11) மாலை கைது செய்யப்பட்டுள்ளாரென, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
அத்துடன், குறித்த மாடுகளையும் அவற்றைக் கொண்டுச்செல்லப் பயன்படுத்தப்பட்ட லொறியையும் கைப்பற்றியதாக, அவர் தெரிவித்தார்.
இதேவேளை, வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட ஓமடியாமடு பகுதியில் இருந்து, அனுமதிப்பத்திரம் இன்றி, அறுவைக்காக அதிக மாடுகள் கொண்டுசெல்லப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அந்நடவடிக்கையைத் தடுக்கும் வகையில், பொலிஸ் சேவை நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, மேற்படி மாடுகளுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டாரென, பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
10 May 2025
10 May 2025