Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
பைஷல் இஸ்மாயில் / 2017 செப்டெம்பர் 22 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜெயஸ்ரீராம்
"கிழக்கு மாகாண சபையின் அபிவிருத்திச் செயற்பாடுகளில், தமிழ்ப் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறுபவர்கள், அவற்றை ஆதாரபூர்வமாக நிரூபிக்குமாறு கோரிய போதிலும், அதில் தயக்கம் காட்டுவது ஏனெனத் தெரியவில்லை" என, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு, இன்று (22) கருத்துத் தெரிவிக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தனது கருத்துத் தெரிவிக்கையில், தம்மீது குற்றஞ்சாட்டுபவர்களுக்கு, வெளிப்படையாக தமது நிதியொதுக்கீடுகள் தொடர்பில் நிருபிக்கத் தயாராகவே இருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் இதன் போது கூறினார்.
தாம் கூறாத ஒரு விடயத்தை வைத்து, தமது அவதூறு அரசியலை செய்து, தனது நிலையை மத்திய அமைச்சர் தாழ்த்திக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"மத்தியிலுள்ள அமைச்சரொருவர், கிழக்கைப் பற்றி சில கருத்துகளை அண்மையில்தெரிவித்திருந்தார். அவ்வாறு கருத்துகளைத் தெரிவித்த அமைச்சர், முதலில் வடக்கு, கிழக்குக்கு வந்து இங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராயுமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன்.
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்கள் இணைந்தே ஆட்சியமைத்துள்ளோம். ஆகவே, எம்மிடையே நிதிகள் சமமாகப் பகிரப்படுகின்றன.
மாகாணத்துக்குப் பகிரப்படும் நிதிகள் ஒவ்வொரு பிரதேசங்களுக்கு சமமாகவே பகிரப்படுகின்றன, எனக்கு அனைத்து பகுதிகளிலும் இடம்பெறும் அபிவிருத்தி நிகழ்வுகளில் பங்கேற்க நேரம் கிடைப்பதில்லை.
தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் அந்த அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பெரும்பாலும், சில பகுதிகளில் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகளிலேயே நான் பங்கேற்பதாலும் ஊடகங்களிலும் அவையே காண்பிக்கப்படுவதாலும், நான் குறித்த பகுதிகளுக்கு மாத்திரமே அபிவிருத்திகளை முன்னெடுப்பதாக ஒரு தோற்றப்பாடு உள்ளது.
ஆனால், நாம் யாருக்கும் பக்கச்சார்பாக நிதிகளை ஒதுக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. எம்மீது குற்றஞ்சுமத்துபவர்கள் முடிந்தால் அதனை நிருபிக்கட்டும் எனச் சவால் விடுகின்றேன்.
அதைவிடுத்து, சவாலை ஏற்க முடியாமல், நாகரிகமில்லாமல் அவதூறுகளை பரப்புவதை விடுத்து, இங்கு வந்து நாகரிகமான வார்த்தைகளை உபயோகித்து அரசியல் செய்வதற்கு கற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றேன்" என்று, குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .