Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜூன் 18 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தின் ஆயிலடிச்சேனை ஆற்றில் மூழ்கி, நாகராசா கரிசனன் என்ற 14 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
நேற்று (17) மாலை 2.30 மணியளவில் தோணியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, காற்றின் வேகம் காரணமாக தோணி ஆற்றின் நடுப்பகுதிக்குச் செல்ல முற்பட்டுள்ளது.
இதனால் பயத்தின் காரணமாக தோணியில் இருந்த சிறுவன் ஆற்றில் பாய்ந்துள்ளார்.
இவ்வாறு ஆற்றில் பாய்ந்த சிறுவனை காப்பாற்ற அயலவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்த போதும், இறுதியில் நேற்றிரவு 11 மணியளவில் சிறுவனின் சடலத்தையே ஆற்றிலிருந்து மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
48 minute ago
1 hours ago