Suganthini Ratnam / 2016 நவம்பர் 02 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் 06 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் மாதம்; 16ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை இச்சந்தேக நபர்களை ஆஜர்படுத்தியபோது, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது, இக்கொலை இடம்பெற்ற இடத்திலிருந்து மீட்கப்பட்ட பாதணிகள் தொடர்பில் இதுவரையில் பொலிஸார் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்று சட்டத்தரணிகளான ஏ.எல்.எம்.முனாஸ், எம்.ஐ.எம்.பழீல் ஆகியோர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனை அடுத்து, விசாரணை அறிக்கையை சர்ப்பிக்குமாறும் ஏறாவூர்ப் பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ஏறாவூர், முகாந்திரம் வீதியை அண்டியை அமைந்துள்ள தங்களின் வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பானுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி மீட்கப்பட்டன.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago