2025 மே 12, திங்கட்கிழமை

கஞ்சா, லேகியத்துடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 31 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவில் கேரள கஞ்சா மற்றும் போதையூட்டப்பட்ட லேகியம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை சனிக்கிழமை (30) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  

இது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து,  திடீர்ச் சோதனை மேற்கொண்டு இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

24 வயதான ஒருவரிடமிருந்து ஒரு கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன்,  அச்சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டார்.
இதேவேளை, 29 வயதான ஒருவரிடமிருந்து 05 கிராம் போதையூட்டப்பட்ட லேகியம் கைப்பற்றப்பட்டதுடன், அச்சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X