Freelancer / 2023 டிசெம்பர் 29 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு றூபஸ் காட்டுப்பகுதியில் விறகு எடுக்கச் சென்ற போது கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.
கஞ்சிகுடிச்சாறு ரூபஸ்குளம் காட்டு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை இச்சம்பவம் இடம்பெற்றதுடன், கரடி தாக்கியதில் தலை, காலில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர் .
திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த தந்தையும் மகனுமே இவ்வாறு கரடி தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது அத்தோடு இதுவரையில் திருக்கோவில் பிரதேசத்தில் 04 பேர் கரடி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.. R
22 minute ago
40 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
40 minute ago
58 minute ago
2 hours ago