Suganthini Ratnam / 2016 ஜூன் 27 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஐயங்கேணி, ரெட்பானாபுரம் கிராமத்தில் வளவு ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (26) இரவு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வளவில் மட்பாண்டம் சூளையிடுவதற்காக மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபடும் பெண்கள் குழி தோண்டிக்கொண்டிருந்தபோது, இந்தக் கைக்குண்டு தென்பட்டுள்ளது. இது தொடர்பில் தமக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த இடத்துக்குச் சென்று கைக்குண்டை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தக் கைக்குண்டு பொலித்தீன் பையினால் சுற்றப்பட்டு புதைக்கப்பட்டிருந்ததாகக் கூறிய பொலிஸார், யுத்தம்; இடம்பெற்ற காலப்பகுதியில் இந்தக் கைக்குண்டு விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025