2025 மே 08, வியாழக்கிழமை

கைதிகள் சமூகத் தலைவர்களாக மாற வாய்ப்புண்டு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்

சிறைக்கைதிகள் சமூகத்; தலைவர்களாக மாறுவதற்கு சந்தர்ப்பம் உள்ளதாக சிறைச்சாலைகள் ஐக்கியம் அமைப்பின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான தலைவரும் போதகருமான ஆர்.தயாசீலன் தெரிவித்தார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள 25 கைதிகளின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கை அச்சிறைச்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'மத மாற்றம் முக்கியமல்ல. மன மாற்றமே முக்கியமாகும். முன்னாள் சிறைக்கைதிகள் பலர் திருந்தி சமூகத் தலைவர்களாக உள்ளனர். மன மாற்றம் ஏற்படும்போது அவர்கள் திருந்தும் சந்தர்ப்பமுள்ளது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X