2025 மே 09, வெள்ளிக்கிழமை

காயமடைந்த யானையை காப்பாற்ற மற்றுமொரு யானை முயற்சி

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 06 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

காயமடைந்த பெண் யானையை ஆண் யானை காப்பாற்ற முயற்சித்த சம்பவம் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாகனேரி குளத்துமடு கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்றுள்ளது.

வாகனேரி காட்டுப்பகுதியில் பெண் யானையொன்று  இனந்தெரியாதோரால் சுடப்பட்டு காயமடைந்துள்ளது.   அந்த யானையை காப்பாற்றும் நோக்கில் ஆண் யானை மனித நடமாட்டம் உள்ள பிரதேசத்துக்கு தள்ளிக்கொண்டுவந்து விட்டுள்ளது.

சுமார் 04 வயது மதிக்கத்தக்க இந்தப்  பெண் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக பொலன்னறுவை மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்திலிருந்து அதிகாரிகள் வருகை தரவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள கிரான் காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X