Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2018 ஓகஸ்ட் 08 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடற்றொழில் அமைச்சால் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத வலைகளைக்கொண்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் கடற்படையினரின் உதவியுடன் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் சுற்றிவளைத்தனர்.
வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வாவிகளில் நேற்று (07) மாலை இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக, மாவட்ட கடற்றொழில் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் ருக்நசான் குரூஸ் தெரிவித்தார்.
இதன்போது பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தடைசெய்யப்பட்ட பெருமளவிலான வலைகளும் இரு தோணிகளும் கைப்பற்றப்பட்டன என்பதுடன், இரு மீனவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றும் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் சட்டவிரோத வலைகளைக்கொண்டு மீன்பிடிப்பதால் பல வகையான மீனினங்கள் அழிந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .