Suganthini Ratnam / 2016 ஜூன் 05 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் ஒருவரை மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பழுகாமம் கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேற்படி கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக தமக்குக் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டு சந்தேக நபரைக் கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து 47 மதுபானப் போத்தல்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சந்தேக நபரை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் நாளை திங்கட்கிழமை ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
7 minute ago
23 minute ago
26 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
26 minute ago
46 minute ago