Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஏறாவூர் பிரசேத்தில் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் மற்றும் ஆட்களின் நடமாட்டம் காணப்படுமாயின் அவை தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு உடனடியாக அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏறாவூரை சேர்ந்த மாணவர் ஒருவர் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்தபோது, வாகனமொன்றில் இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டு பின்னர் அம்மாணவர்; தப்பிவந்துள்ளார். அதேபோன்று மற்றுமொரு மாணவனை கடத்த முற்பட்டபோது அம்முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையிலேயே, பொலிஸார் இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஏறாவூரில் பொலிஸாரின் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொதுமக்களுக்கான அறிவித்தல் ஏறாவூர்; பொலிஸாரினால் ஒலிபெருக்கி மூலமும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பொலிஸார் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதாகவும் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
38 minute ago
39 minute ago