Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Janu / 2025 மே 12 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல சபைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்கவும் முதலில் தமிழ் பேசும் கட்சிகளுடன் கட்சியின் தலைமைத்துவம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
கிண்ணியா பெரியாற்று முனை நகர சபைக்கு சொந்தமான கட்டிடத்தில் திங்கட்கிழமை (12) இடம் பெற்ற உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் மற்றும் வெற்றியீட்டிவர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர், முத்து முஹம்மது மற்றும் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
சில சபைகளில் பிரதி தவிசாளர்களை பெறுவதற்கும் சில சபைகளில் ஆட்சியின் பங்காளர்களாக இருப்பதற்கும் செயல்பட்டு வருகிறோம். குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய மாவட்டங்களிலும் வாக்களித்த மக்களுக்கு எமது கட்சி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் அதேபோல் கட்சியினுடைய வேட்பாளர்கள் அரும்பாடுபட்டு தங்களுக்காகவும் கட்சிக்காகவும் ஒன்று பட்டு வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன் .
அதிக பட்ச ஆதரவுகள் கிடைக்கப்பெற்றுள்ள திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவாக இருக்கலாம் இதில் ஆட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நல்ல சபைகளை உருவாக்கி அதன் மூலம் பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும் உச்ச பயனை பெற்றுக் கொடுப்போம் என்றார்.
எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கான மாவட்ட தலைமைத்துவம் மற்றும் மத்திய குழு உள்ளிட்டவற்றை உயர்பீட ஒன்று கூடலின் பின் முடிவுகளை எடுப்போம். இம் முறை திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தல் நல்லதொரு முடிவுகளை பெற்று மாற்றம் கண்டுள்ளது.இதற்காக கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் உள்ளிட்டவர்கள் உழைத்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன் என்றார்.
ஏ.எச் ஹஸ்பர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
3 hours ago