2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சந்திரகாந்தன் உள்ளிட்டோருக்கான விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2016 ஜூன் 08 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்

முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான 'பிரதீப் மாஸ்டர்' என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, 'கஜன் மாமா' எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் ஆகியோருக்கு எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
 
இவர்களை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று புதன்கிழமை (08) ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜ சிங்கம், மட்டக்களப்பு புனித மரியாழ் தேவாலயத்தில் 25.12.2005 அன்று நடைபெற்ற நல்லிரவு ஆராதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X