Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-.எம்.எஸ்.எம்.நூர்தீன்
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சமூகத்தை நேசிக்கும் சமூக சேவையாளர்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால்; முன்னுரிமை வழங்கப்படுமென அக்கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'யுத்தத்தின் பின்னர் உள்ளூராட்சிமன்றங்களின் பயன்பாடுகள், மாகாணசபைகளின் அதிகாரப் பயன்பாடுகள் தொடர்பில் மக்களுக்கும் மற்றைய அரசியல்; தலைவர்களுக்கும் தெளிவுபடுத்தியவர்கள் நாங்கள்.
மாகாணசபையினூடாக தமிழர்களின் அரசியல் அதிகார இருப்பை தக்கவைத்துக்கொண்டு, அடுத்த கட்ட அரசியல் அதிகாரத்தை நோக்கிப் பயணிப்பது எவ்வாறு என்பதை நடைமுறைச்;சாத்தியமாக 2008-2012வரை நடத்திக்காட்டிய பின்னரே, மாகாணசபை முறைமை வேண்டாமென்று 2008 இல் தேர்தலையே பகிஷ்கரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் 2012 இல் தேர்தலில் களமிறங்கியது.
கிழக்கு மாகாணத்தில் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்டபோதிலும், அரசியல் சாணக்கியமின்மையால் த.தே.கூ. மாகாணசபையைக் கைப்பற்;றக்கூடிய வாய்ப்பிருந்தும் கைப்பற்றவில்லை. ஆனால், 07 ஆசனங்களை வைத்துக்கொண்டு முதலமைச்சர் உட்பட ஆட்சி அதிகாரத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னகப்படுத்தியது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2008 இல் உள்ளுராட்சிமன்றங்களை பொறுப்பேற்ற த.ம.வி.பு. கட்சி மக்களின்; ஆணையுடன் வீதிகள் அமைப்பது முதல் மயானங்களை பதிவு செய்வதுவரை உள்ளூராட்சியின் நிர்வாகச் செயற்பாடுகளை நிறைவேற்றியிருந்தது. பிரதேசத்தையும் சமூகத்தையும் நேசிக்கும் துடிப்புள்ள இளம் தலைவர்களுக்கு த.ம.வி.பு. கட்சி இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் முன்னுரிமை அளிக்கவுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago