Mayu / 2026 மார்ச் 26 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டுக்கான சிறுபோக வேளாண்மை செய்கைகாண ஆயத்தப் பணிகள் விவசாயிகளினால் படுவான்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
கிழக்கு மாகாணத்தில் விவசாய அமைச்சினால் விவசாயிகளுக்குரிய பசளைகளை தங்கு தடை இன்றி வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளும் மாவட்ட உர செயலகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது விவசாய காணிகளை உழவு செய்து, வரம்புகயை அமைத்து, நீர்ப்பாசன வாய்க்கால்களை துப்புரவு செய்து, பாதுகாப்பு வேலி அமைத்தல் போன்ற முன்னாயத்த பணிகளில் தற்போது விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்முறை மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு சிறு போக நெற்செய்கைக்கு தேவையான 7234 மெட்ரிக் தொன் யூரியா 1078 மெட்ரிக் தொன் ரி.எஸ்.பி, 1709 மெட்ரிக் தொன் எம்.ஒ பி. ஆகிய பசளை வகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசி உரச் செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியலயம் தெரிவித்துள்ளது.
வ.சக்தி
25 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago