2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தாயையும் மகனையும் காணவில்லை

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, புன்னச்சோலை கிராமத்தை சேர்ந்த தாயும் மகனும் காணாமல் போயுள்ளனரென, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னச்சோலை, இலக்கம் 145/17 , மூன்றாம் குறுக்கை சேர்ந்த தர்ஷன் ஜோதிமலர் என்ற தாயையும் அவரின் நான்கு வயதுடைய மகனையுமே, கடந்த வெள்ளிக்கிழமை (31) நண்பகல் முதல் காணாவில்லை என, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

காணமல்போனோர் தொடர்பாக, மட்டக்களப்பு பொலிஸாரால் தேடப்பட்டுவரும் நிலையில், இவர்கள் தொடர்பாகத் தகவல் அறிந்தவர்கள், 065 222 44 23 என்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலைய இலக்கத்துக்கு அறிவிக்குமாறு, பொலிஸார் வேண்டியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X