2025 மே 08, வியாழக்கிழமை

துப்புரவு செய்யும் வேலைத்திட்டம்

எம்.எம்.அஹமட் அனாம்   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வழிகாட்டலில், “நாட்டைத் தூய்மையாக்குவோம்” என்ற வேலைத்திட்டத்துக்கமைய, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தூய்மையாக்கும் வேலைத்திட்டம், இன்று (03) ஆரம்பிக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஜய பெரமுன, வாழைச்சேனை பிரதேச சபை ஊழியர்கள், பொலிஸார் கலந்துகொண்டனர்.

வாழைச்சேனை பிரதேச சபை முன்பாகவிருந்து மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியின், வாழைச்சேனை துறைமுகச் சந்தி வரை தூய்மையாக்கும் வேலைத்திட்டம் இதன்போது முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X