Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 31 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் இளைஞர் ஒருவரை கோடரி மற்றும் கத்தியால் தாக்கினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட 28 வயதுடைய ஒருவரை எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி, சனிக்கிழமை (30) மாலை உத்தரவிட்டார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு அருகில் வெள்ளிக்கிழமை (29) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் தாமரைக்கேணிப் பகுதியைச்; சேர்ந்த மன்சூர் முஜாஹித் (வயது 26) என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.
உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஏறாவூர்ப் பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்படி நபரை சனிக்கிழமை கைதுசெய்து நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago