Suganthini Ratnam / 2016 ஜூன் 28 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ ஒன்றியத்தின் கூட்டு முயற்சியால் கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தேவாலயத் திறப்பு விழா நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்றது.
இப்புதிய தேவாலயத்தை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் திறந்துவைத்துள்ளார். இதன்போது, கத்தோலிக்க ஒன்றியத்தின் வருடாந்த இதழான தூதன் சஞ்சிகை வெளியீடும் நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு – அம்பாறை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் தலைமையில் புதிய தேவாலயம் ஆசிர்வதிக்கப்பட்டு முதல் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.


2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025