2025 மே 09, வெள்ளிக்கிழமை

’பரீட்சைகளால் சிறுவர்களின் உரிமைகள் மீறப்படுகின்றன’

பேரின்பராஜா சபேஷ்   / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு கல்வி வலயத்தால் 3ஆம் தவணை ஆரம்பத்தில் நடத்தப்படும் பண்புசார் விருத்திக்கு முரணான பரீட்சைகளால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு உட்பட்டுள்ளதோடு, சிறுவர் உரிமைகளை மீறும் வகையில் இப்பரீட்சைகள் அமைந்துள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்அறிக்ககையில், கடந்த இரண்டாம் தவணையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில், மட்டக்களப்பு கல்வி வலய மாணவர்களும் ஆசிரியர்களும் கடும் மன உளைச்சலுக்கு மத்தியில் சிறப்பான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த வேளையில், மட்டக்க ளப்பு கல்வி வலயம் பரீட்சைப் பகுப்பாய்வுகளை நடத்தியமை கண்டிக்கத்தக்கதென குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X