2025 மே 09, வெள்ளிக்கிழமை

மயானத்தில் சிறுமி துஷ்பிரயோகம்; குடும்பஸ்தர் கைது

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

15 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்று பெற்றோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை (21) இரவு குடும்பஸ்தர் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த ஆறுமுகம் நிர்மலராஜ் (வயது 32) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், மேற்படி சிறுமியை முறக்கொட்டான்சேனைப் பகுதியிலுள்ள மயானத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சிறுமி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X