Suganthini Ratnam / 2016 ஜூன் 30 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் அமைந்துள்ள மர ஆலை ஒன்றில் இன்று வியாழக்கிழமை தீ பரவியதில் அம்மர ஆலையும் வீடும் தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவினரின் உதவியுடன் பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.
இத்தீ விபத்துக் காரணமாக சுமார் 60 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர், காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தீ பரவியமைக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



23 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
9 hours ago