2025 மே 08, வியாழக்கிழமை

மீன் வியாபாரியை கொன்ற யானை

Freelancer   / 2022 செப்டெம்பர் 03 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் புலிபாய்ந்த கல் பகுதியில்இன்று (3) காலை யானை தாக்கி ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்தில் கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பொன்னுத்துரை ஆனந்தன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

ஓட்டமாவடி பகுதியில் இருந்து மீன்களை எடுத்துக் கொண்டு  புலிபாய்ந்த கல் பகுதிக்கு விற்பனை செய்யச் சென்ற போதே யானை தாக்கி மரணமடைந்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X