2025 மே 07, புதன்கிழமை

மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்கள் பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 06 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகர சபையின் மாடு அறுக்கும் மடுவத்தில்  மாடுகளை அறுக்கும்போது அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் அதனை தீர்த்து தருமாறு கோரி நகர சபைப் பிரிவிலுள்ள மாட்டு இறைச்சிக் கடை உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை இறைச்சிக் கடைகளை மூடி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காத்தான்குடி நகர சபைப் பிரிவிலுள்ள பொதுச்சந்தை, புதிய காத்தான்குடிச் சந்தை உட்பட 23 மாட்டு இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக காத்தான்குடி நகர சபை செயலாளர் ஜே.சர்வேஸ்வரனிடம் கேட்டபோது, இவர்களின் பகிஷ்கரிப்பு தொடர்பாக எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X